மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 24 Feb 2021 10:44 AM GMT (Updated: 24 Feb 2021 10:44 AM GMT)

மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசகொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டதிற்கு பிறகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 2 வது கட்ட கொரோனா தடுப்பூசி பணிகளில்  பல தனியார் மருத்துவமனைகள் பங்கேற்க உள்ளன.

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.  தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி வழங்கப்படும். ஆனால் அங்கு அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த 3-4 நாட்களுக்குள் இந்த தொகை சுகாதார அமைச்சினால் முடிவு செய்யப்படும்.

இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும், 20 ஆயிரம் தனியார் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அரசு மையங்களில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேலானவர்களுக்கும் வரும்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என கூறினார்.

Next Story