கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை


கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2021 2:06 PM GMT (Updated: 24 Feb 2021 2:06 PM GMT)

ஐதராபாத்தில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத் 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த  மாணவி பிப்ரவரி 11-ம் தேதி மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது ஆர்.எல்.நகர் காலனிக்கு செல்ல 6 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் ஏறிய போது 6 பேர் கொண்ட கும்பல் தன்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டில் கூறியுள்ளார். அதனையடுத்து, அவருடயை பெற்றோர்கள்  போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. கல்லூரியிலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதமான நிலையில் வீட்டில் பொய் கூறியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், அந்தப் பெண் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் மயக்கமான நிலையில் பார்த்த அவருடைய பெற்றோர் காட்கேசர் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு மருத்துவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

இதுகுறித்து காட்கேசர் வட்ட ஆய்வாளர், கூறும்  அந்த பெண்  காலை 11 மணியளவில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். 10:55 மணிக்கு, அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து உள்ளார் என கூறினார்.

Next Story