கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய அம்மாநிலத்தில் இன்று 70- ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 17- பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,885- ஆகும். கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்து 720- ஆகும். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,136- ஆகும்.
Related Tags :
Next Story