மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்தநிலையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாதிப்பு 5 ஆயிரத்து 210 ஆக குறைந்தது. ஆனால், நேற்று 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவானது.
இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று 8,807- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,772- ஆகும். கொரோனா பாதிப்பால் இன்று 80- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 119- ஆக உள்ளது.
தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 08- ஆயிரத்து 623- ஆகும். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 59,358 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,937- ஆக உள்ளது.
Related Tags :
Next Story