அரியானா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 3 பேர் பலி


அரியானா பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 3 பேர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2021 2:36 AM GMT (Updated: 25 Feb 2021 2:36 AM GMT)

அரியானா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

அரியானா,

அரியானா மாநிலம் கர்னால் எனும் இடத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும்  ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  வெடி விபத்தில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தகவல் அளித்துள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.

Next Story