3வது காலாண்டில் ஜி.டி.பி. 0.4 சதவீதம் வளர்ச்சி; புள்ளியியல் அமைச்சகம் அறிவிப்பு
3வது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதி வாரம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கின. சர்வதேச மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்து உள்பட அனைத்து வகையான ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டன.
பொது முடக்கத்தினால் மக்கள் வெளியே செல்வது குறைந்தது. நாட்டில் உற்பத்தியும் குறைந்தது. இதனால் பொருளாதாரமும் தேக்கமடைந்தது. இந்நிலையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு 2020-21ம் ஆண்டின் 3வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது என அறிவித்து உள்ளது.
எனினும், 2021ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 8 சதவீதம் சுருங்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story