கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Feb 2021 6:09 PM GMT (Updated: 27 Feb 2021 6:09 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,792- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் இன்று தொற்று பாதிப்பு கண்டறிய 73,710-  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன்  50 ஆயிரத்து 514- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனாவில் இருந்து 4,650- பேர் இன்று குணம்  அடைந்துள்ளனர்.கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 56 ஆயிரத்து 149- ஆக உயர்ந்துள்ளது.  தொற்றில் இருந்து 10 லட்சத்து 01 ஆயிரத்து 164- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 182- ஆக உள்ளது.

Next Story