மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு


மராட்டியம்: அமராவதியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2021 7:55 PM GMT (Updated: 27 Feb 2021 7:55 PM GMT)

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து அமராவதி, அச்சால்புர் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பட்டு இருந்தது. பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 வரை வெளியே வர அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமராவதி மாவட்ட கலெக்டர் சைேலஷ் நாவல் கூறுகையில், 

" அமராவதி, அச்சால்புர் மற்றம் அந்த நகரங்களையொட்டிய பகுதிகள் மற்றும் ஒட்டுமொத்த அஞ்சான்காவில் வருகிற 8-ந் தேதி வரை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் " என்றார். இதேபோல நாக்பூர், புல்தானா, யவத்மால் ஆகிய பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Next Story