டெல்லியில் 3வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடக்கம்


டெல்லியில் 3வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2021 5:03 PM GMT (Updated: 28 Feb 2021 5:03 PM GMT)

டெல்லியில் 3வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளன.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின.  இதன்படி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

டெல்லியில் 136 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 56 அரசு மருத்துவமனைகள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் 3வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளன.  இவற்றில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட துணை வியாதிகளை உடையவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படும் என டெல்லி சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இதற்காக ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 10,910 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story