விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - பிரதமர் மோடி


விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 March 2021 7:26 AM GMT (Updated: 1 March 2021 7:26 AM GMT)

விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

விவசாயத்தின் அனைத்து துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய பட்ஜெட் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தரங்கு கூட்டத்தில்  2021-22 பட்ஜெட்டில் விவசாயத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், “வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெரும்பாலான பங்களிப்புகள் பொதுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 



21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு அறுவடைக்கு பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி மற்றும் வேளாண் உற்பத்தி அதிகரித்து வருவதால் மதிப்பு கூட்டல் தேவை. இது 2-3 தசாப்தங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருந்தால் நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும்

விவசாய கடன் இலக்கை மத்திய அரசு ரூ .16.50 லட்சமாக உயர்த்தியுள்ளது - கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு நிதி ரூ .40,000 கோடியாக உயர்த்தப்பட்டது. மைக்ரோ பாசன நிதி இரட்டிப்பாகியது” என்று பிரதமர் மோடி கூறினார்.

Next Story