இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 17,407 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 17,407 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 March 2021 4:58 AM GMT (Updated: 4 March 2021 4:58 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,56,923 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,435 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 14,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,26,075 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,73,413 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,66,16,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story