பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு


பீகாரில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 March 2021 5:52 PM GMT (Updated: 8 March 2021 5:52 PM GMT)

பீகாரில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ககாரியா,

பீகார் மாநிலத்தில் ககாரியா நகரில் சண்டி தோலா பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணி நடந்து வந்தது.  இந்த நிலையில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.

இதில் சிக்கி கொண்ட தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.  பலர் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Next Story