மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 11 March 2021 3:55 AM GMT (Updated: 11 March 2021 3:55 AM GMT)

மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா இன்று (11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரியில் நின்று சிவபெருமானை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்துபிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

மகா சிவராத்திரி திருநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த மங்களகரமான நன்னாளில் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

மகாசிவராத்திரியின் மங்களகரமான நன்னாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் திருமணத்தின் புனிதமான நினைவாக கொண்டாடப்படும் இந்த திருவிழா முழு மனிதகுலத்திற்கும் பயனளிக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story