டெல்லியில் முக்கிய பகுதிகளில் இன்று காலை திடீர் மழை; மக்கள் மகிழ்ச்சி
டெல்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று காலை திடீரென மழை பெய்து குளிர்வித்தது.
புதுடெல்லி,
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் கோடையை முன்னிட்டு வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகலில் பணிக்காக வெளியே செல்பவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், டெல்லி-என்.சி.ஆர். உள்ளிட்ட பகுதிகளில் பருவநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் வானம் இருண்டு காணப்பட்டது.
டெல்லி-உத்தர பிரதேச எல்லை பகுதியான காசிப்பூரில் காலையில் இருள் சூழ்ந்த நிலை ஏற்பட்டது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் இரவில் செல்வது போல் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
டெல்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இன்று காலை பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மழை பெய்து அந்த பகுதியிலுள்ள மக்களை குளிர்வித்துள்ளது.
Related Tags :
Next Story