ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்


ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
x
தினத்தந்தி 15 March 2021 3:33 AM GMT (Updated: 15 March 2021 3:33 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெருவாரியான இடங்களை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடந்து முடிந்தது.  இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில், முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.  மொத்தம் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில், 11 மாநகராட்சிகளையும், 73 நகராட்சிகளையும் அக்கட்சி கைப்பற்றி இருக்கிறது.  எலூரு மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு தேச கட்சியானது, தடிபத்ரி மற்றும் மைதுகூரு ஆகிய நகராட்சிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பா.ஜ.க., ஜே.எஸ்.பி., சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். ஆகிய பிற கட்சிகள் ஆந்திரா முழுவதும் ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகளை கைப்பற்றி உள்ளன.

மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 671 வார்டுகளில், 425 வார்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.  91 இடங்களில் போட்டியின்றி தேர்வு பெற்றது.  தெலுங்கு தேச கட்சி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  ஜே.எஸ்.பி. 7, சி.பி.எம். 2, சி.பி.ஐ. 1 மற்றும் பா.ஜ.க. 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

Next Story