கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ்; மாணவர்கள் மகிழ்ச்சி


கொரோனா பாதிப்பு:  புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை ஆல் பாஸ்; மாணவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 March 2021 9:29 AM GMT (Updated: 15 March 2021 9:29 AM GMT)

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுகின்றனர் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுகின்றனர் என புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.  எனினும், இந்த மாத இறுதி வாரத்தில் ஒரு நாள் மனஅழுத்த விடுவிப்புக்கான ஆய்வு நடத்தப்படும்.

வருகிற 31ந்தேதி வரை 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் நடைபெறும்.  அதன்பின்னர் ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படும்.

10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் பொது தேர்வு நடைபெறும் வரை நடைபெறும்.  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள, தமிழ்நாடு கல்வி வாரியத்துடன் தொடர்புடைய பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி தமிழ்நாடு வாரியம் வெளியிட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story