புனேவில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புனேவில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 March 2021 4:28 PM GMT (Updated: 16 March 2021 4:28 PM GMT)

புனேவில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அங்கு கொரோனாவின் 2வது அலை தொடங்கிவிட்டதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் புனே மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3,574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இன்று 1,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது புனேவில் 24,204 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 4,10,347 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக புனே மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story