பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு


பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 March 2021 6:24 PM GMT (Updated: 17 March 2021 6:24 PM GMT)

பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சண்டிகர்,

பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 2,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாபில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,03,049 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இன்று 35 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,172 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 1,274 பேர் பஞ்சாபில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

பஞ்சாபில் தற்போது 13,320 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 1,83,557 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பஞ்சாப் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு:

குஜராத் மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று புதிதாக 1,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,173 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,137 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 775 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

குஜராத்தில் தற்போது 5,310 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 2,71,433 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story