ஆந்திராவில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 March 2021 1:52 PM GMT (Updated: 18 March 2021 1:52 PM GMT)

ஆந்திராவில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,  

ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,740 ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 8,83,759 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,186 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story