பாக். பிரதமர் இம்ரான் கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்


பாக். பிரதமர் இம்ரான் கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்
x
தினத்தந்தி 20 March 2021 2:42 PM GMT (Updated: 20 March 2021 2:42 PM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைந்து குணம் அடைய விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

 பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதனால், மிதமான கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 பாகிஸ்தானில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

இந்த நிலையில், இன்று இம்ரான் கானுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இம்ரான் கான் விரைவில் உடல் நலம் பெற விருப்பம் தெரிவித்து பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

Next Story