தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல்


தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2021 5:27 PM GMT (Updated: 20 March 2021 5:27 PM GMT)

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவை மிரட்டி வருகிறது.  மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

 கொரோனாவுக்குஎதிரான தடுப்பூசி போடும் பணி ஒருபக்கம் நடந்து வருகிறது. எனினும், கொரோனா அச்சுறுத்தலும்  அடங்காததால், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாவட்ட அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  அமல்படுத்தப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: - கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கவசங்களை கைவிட்டு விடக்கூடாது என நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். 

அதாவது, சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை தவறாது பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு இதுதான் நமது முக்கியமான கருவியாகும். தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார். 


Next Story