டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 March 2021 7:41 PM GMT (Updated: 20 March 2021 7:41 PM GMT)

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர், 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் சங்கங்களில் ஒன்று, பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரகன்). இதன் தலைவரான, 75 வயதாகும் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோகிந்தர் சிங் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், ‘எனக்கு கொரானோ தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நலமாக உள்ளேன். விரைவில் விவசாயிகள் போராட்டத்தில் மீண்டும் இணைவேன். கவலைப்படத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனையின் டாக்டர் குல்விந்தர் சிங் கூறுகையில், “புதன்கிழமை மாலை காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறலுடன் ஜோகிந்தர் சிங் உக்ரகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமாக உள்ளார். அவர் சிகிச்சைக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார். கொரோனா நெறிமுறையின்படி மாவட்ட அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

Next Story