கொரோனா பரவல் அதிகரிப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்


கொரோனா பரவல் அதிகரிப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 23 March 2021 12:04 PM GMT (Updated: 23 March 2021 12:04 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல்  அதிகரித்து வருவதால்,  வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
  •  RT- PCR பரிசோதனையை 70 சதவீதம்  அளவில் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை செய்ய வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையே தனி நபர் நகர்வு போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை
  • மாநிலத்திற்குள் தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு கட்டுப்பாடு தேவையில்லை
  • பொது இடங்கள் பணியிடங்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக மநில அரசுகள் வெளியிட வேண்டும். 
  • சூழலை பொறுத்து மாவட்ட, நகர அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம்.  தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 முதல் அமலில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story