கர்நாடகா, ஆந்திராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா


கர்நாடகா, ஆந்திராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா
x
தினத்தந்தி 23 March 2021 12:48 PM GMT (Updated: 23 March 2021 12:48 PM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2010- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா  பாதிப்பு படிபடியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் 2010- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 677- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

கர்நடகாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 657- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 594- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 449- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 449- ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் கடந்த 24 மணி  நேரத்தில் 492- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 256- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,616- ஆக உள்ளது. 


Next Story