உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோராடூன்,
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஹரீஸ் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று உறுதியான நிலையில் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் அண்மையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story