“மகிழ்ச்சியின் திருவிழா, உயர்வு” - பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2021 2:58 AM GMT (Updated: 29 March 2021 2:58 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “உங்கள் அனைவருக்கும் மிகவும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். மகிழ்ச்சி, மேன்மை, சந்தோஷம் மற்றும் உயர்வு ஆகியவற்றின் இந்த திருவிழா அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வீரியத்தையும் புதிய ஆற்றலையும் ஊக்குவிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி இந்தியில் பதிவிட்டுள்ளார்.




Next Story