ஹோலி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2021 3:56 AM GMT (Updated: 29 March 2021 3:56 AM GMT)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது, “சக குடிமக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழா, ஹோலி, சமூக நல்லிணக்கத்தின் பண்டிகை, இது மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது. இந்த திருவிழா நமது கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.




Next Story