தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகம் + "||" + Rats drank it Cops as 1,000 litres of seized liquor disappears from police station

போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகம்

போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகம்
போலீஸ் நிலையத்தில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் மாயம் எலிகள் குடித்து விட்டதாக போலீசார் நாடகமாடுகின்றனர்
கான்பூர்

உத்தரப்பிரதேசம் பரேலி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில்  பீகாரில் இருந்து  சட்டவிரோதமாக  கடத்தபட்ட  மது பாட்டில்களை பிடித்த போலீசார் அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். 

இவற்றின் எண்ணிக்கையை திடீரெனச் சோதனை செய்தபோது அவற்றில் 1,400 பெட்டிகளில் இருந்த 1000 லிட்டர் மது மாயமானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதன் பொறுப்பாளர்களைக் கேட்டபோது அவற்றை எலிகள் சேதப்படுத்தி விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதை நம்பாத போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ்  நிலையத்தின் ஆய்வாளர் இந்திரேஷ்பால் சிங் மற்றும் எழுத்தரான ரிஷால்சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

சில போலீஸ் நிலையங்களில் பொருட்களைக் காணாமல் போகச் செய்து அவை சேதமடைந்ததாகக் கணக்கு காட்டப்படுவது உண்டு. மிகச் சிறிய எண்ணிக்கையிலான பொருட்கள் காணாமல் போனால் எலிகள் காரணமாகக் காட்டப்படுவதும் வழக்கமே. தற்போது காணாமல் போன மது பாட்டில்களின் எண்ணிக்கை பல ஆயிரம் பாட்டில்கள் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன் சிங் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கு - ஐகோர்ட்டு உத்தரவு
உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. மதரஸா மாணவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி: உத்தரபிரதேச முதல்வர் உத்தரவு
மதரஸா மாணவர்கள் கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பயில அனுமதி வழங்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார் இதானால் 3 லட்சம் பேர் பலனடைவார்கள்.
3. உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதியதில் 6 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
4. உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 2 சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
5. உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.