அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு


அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்:  மத்திய அரசு
x
தினத்தந்தி 30 March 2021 9:34 PM GMT (Updated: 30 March 2021 9:34 PM GMT)

இந்தியாவில் கடந்த சில வாரங்காளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிக்ரித்துள்ளது.

புதுடெல்லி,

சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிகமாக உள்ள டாப் 10 மாவட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 மாவட்டங்கள், மராட்டிய மாநிலத்தில் உள்ளன.

புனே, மும்பை, நாக்பூர், தானே, நாசிக், அவுரங்காபாத், நேன்டட், அகமதுநகர் ஆகியவைதான் அந்த மாவட்டங்கள். டெல்லி, பெங்களூரு மாநகர் ஆகிய மாவட்டங்களும் இதில் உள்ளன.

கடந்த வாரம், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு சராசரி விகிதம் 5.65 சதவீதமாக இருந்தது. ஆனால், மராட்டிய மாநிலத்தில் 23 சதவீதமாக இருந்தது. எல்லா மாநிலங்களிலுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும்.

கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்படும் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதே சமயத்தில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இன்று (நேற்று) காலை 10 மணி நிலவரப்படி, 6 கோடியே 11 லட்சத்து 13 ஆயிரத்து 354 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போட்டதில் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி, 1-ந்தேதி தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story