திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 March 2021 12:26 PM GMT (Updated: 31 March 2021 12:26 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள்குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் விழாக்கள்குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ந் தேதி காலை 9 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் புத்தக வெளியீடு நடக்கிறது. நரஹரி தீர்த்தம், ஜெயதிர்தா, பதிராஜா மற்றும் வியாசராஜா யதிஷ்வர் ஆகியோரின் பாடல்களின் முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகள் இதில் உள்ளன.

6-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 8-ந் தேதி அண்ணமாச்சார்ய வர்தந்தி, 9-ந் தேதி ஸ்ரீ பாஸ்யகாரு உற்சவம், 13-ந் தேதி பிளாவ்னாமா ஆண்டு உகாடி, 18-ந் தேதி ஸ்ரீவாரி ஆஸ்தானம், ராமானுஜ ஜெயந்தி, 21-ந் தேதி ராமநவமி ஆஸ்தானம், 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வசந்த உற்சவம் ஆகியவை நடக்கிறது.

Next Story