நான் ஒரு காலில் மேற்குவங்காளத்தில் வெற்றி பெறுவேன்; இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றி பெறுவேன் - மம்தா பேச்சு


நான் ஒரு காலில் மேற்குவங்காளத்தில் வெற்றி பெறுவேன்; இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றி பெறுவேன் - மம்தா பேச்சு
x
தினத்தந்தி 5 April 2021 8:55 AM GMT (Updated: 5 April 2021 8:55 AM GMT)

நான் ஒரு காலில் மேற்குவங்காளத்தில் வெற்றிபெறுவேன், எதிர்காலத்தில் இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றி பெறுவேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 6 தொகுதிகளுக்கு முறையே ஏப்ரல்  6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அடுத்தகட்ட தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹூக்லி மாவட்டம் தீபநாதபூர் பகுதியில் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலில் போட்டியிட சொந்தகட்சியை வேட்பாளர்கள் யாரும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. அவர்களின் சொந்த கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. அவர்களின் அனைத்து வேட்பாளர்களும் ஒன்று திரிணாமுல் காங்கிரசில் இருந்து வாங்கப்பட்டவர்கள் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வாங்கப்பட்டவர்கள். அவர்கள் குழாயில் இருந்து தண்ணீரை தெளிப்பதுபோல பணத்தை தெளிக்கின்றனர். தங்க வங்காளம் (சோனார் பெங்கால்) என்று கூட சரியா உச்சரிக்க தெரியாதவர்கள் வங்காளத்தை ஆட்சி செய்ய முடியாது. 

வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த காரணம் என்ன? இது பாஜக அரசால் செய்யப்பட்டது. தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் (தேர்தல் ஆணையம்) தேர்தலை குறுகிய காலத்திற்குள் முடிக்கக்கூடாதா? நான் ஒரு காலில் மேற்குவங்காளத்தில் வெற்றிபெறுவேன், இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றிபெறுவேன்’ என்றார்.

Next Story