“உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள்” - மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2021 11:18 AM GMT (Updated: 5 April 2021 11:18 AM GMT)

உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள் என்ன என்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராய்ப்பூர், 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். 

பிஜப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்ததாக பிஜப்பூர் எஸ்.பி. கமலோச்சன் காஷ்யப் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், இதன் பொருள் என்ன என்று மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “ எவ்வித திட்டமிடலும் இல்லாமல், மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் திறமையற்ற முறையில் செயல்படுத்தப்பட்ட திட்டம். இது உளவுத்துறையின் தோல்வி இல்லை என்றால், நக்சலுக்கு நிகரான எண்ணிக்கையில் (1:1) பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டது எப்படி?.” என்று கேள்வி எழுப்பினார்.  

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “21 ஆம் நூற்றாண்டில் எந்தவொரு ராணுவ வீரரும் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக் கூடாது. உடல் கவசம் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கிடைக்க வேண்டும்” என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 





Next Story