ரஃபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரணை கோரும் காங்கிரஸ்; முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுப்பு


ரஃபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரணை கோரும்  காங்கிரஸ்; முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுப்பு
x
தினத்தந்தி 5 April 2021 12:20 PM GMT (Updated: 5 April 2021 12:20 PM GMT)

ரஃபேல் ஒப்பந்தத்தில் 1.1 மில்லியன் யூரோ 'கமிஷன்' கொடுக்கபட்டது என பிரெஞ்சு ஊடகங்கள் கூறியதை அடுத்து விசாரணை கோரும் காங்கிரஸ், முற்றிலும் ஆதாரமற்றது பா.ஜ.க மறுத்து உள்ளது.

புதுடெல்லி

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 2016ல்  போடப்பட்டது. இதன்படி, ஏற்கனவே 11 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இவை தற்போது, அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. கிழக்கு லடாக்கில் சீனாவுடன் சமீபத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட போது, இந்த விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி 4 வது தொகுதி  3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது.  கடந்த வாரம் புதன்கிழமை மாலை அவை இந்தியா வந்தடைந்தன.  இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

ஐந்து ரபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி ஜூலை 29 அன்று இந்தியா வந்து சேர்ந்தது.நவம்பர் 3 ம் தேதி மூன்று ரபேல் ஜெட் விமானங்களின் இரண்டாவது தொகுதி இந்தியாவுக்கு வந்தது. மூன்றாவது தொகுதி  ஜனவரி 27 அன்று வந்து சேர்ந்தது.

இது தவிர, மேலும் 7 ரபேல் விமானங்கள் இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவை வந்து சேர்ந்த பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 21 ஆக உயரும். மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதன் மூலம், இந்தியாவிடம் விமானப்படை பெரும் பலத்தை பெறும்.

இந்த ரபேல்  நிலையில் விமான உற்பத்தியாளரால் 1.1 மில்லியன் யூரோக்கள் ஒரு "இடைத்தரகருக்கு" வழங்கப்பட்டதாக ஒரு பிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து  ரஃபேல் போர்விமான  ஒப்பந்தத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றுக் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா  நிருபர்கள் கூட்டத்தில் பேசியதாவது:-

 இந்த ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினார் அது சரியானவை என்பதை பிரெஞ்சு செய்தி போர்ட்டலின் அறிக்கை நிரூபித்துள்ளது.

உண்மையில் எவ்வளவு லஞ்சம் மற்றும் கமிஷன் என்பதைக் கண்டறிய இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த விசாரணை நடத்த வேண்டும் ஏதேனும் இருந்தால், இந்திய அரசாங்கத்தில் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இப்போது இந்த  தேசத்திற்கு பதிலளிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  கூறும் போது இந்த குற்ரச்சாட்டு  "முற்றிலும் ஆதாரமற்றது" என்று நிராகரித்தார், மேலும் காங்கிரஸ் கட்சி இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது.

காங்கிரஸ் மீண்டும் ரஃபேல் பிரச்சினை பற்றி ஏன் பேசுகிறது? இந்த ஒப்பந்தத்தில் சுப்ரீம் கோர்ட், சிஏஜியும் எந்த தவறும் செய்யவில்லை என கூறி விட்டன. 

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றியது, ஆனால் மோசமாக தோற்றது என கூறினார்.


Next Story