கர்நாடகத்தில் புதிதாக 6,976 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 6,976 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 9:00 PM GMT (Updated: 7 April 2021 9:00 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 6,976 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பரிசோதனைகள்

  கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 25 ஆயிரத்து 390 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 6,976 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 33 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.

  ஒரே நாளில் 2,794 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது. 353 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று

  பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,991 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 13 பேர், பல்லாரியில் 49 பேர், பெலகாவியில் 101 பேர், பெங்களூரு புறநகரில் 70 பேர், பீதரில் 214 பேர், சாம்ராஜ்நகரில் 39 பேர், சிக்பள்ளாப்பூரில் 37 பேர், சிக்கமகளூருவில் 38 பேர், சித்ரதுர்காவில் 20 பேர், தட்சிண கன்னடாவில் 112 பேர், தாவணகெரேயில் 20 பேர், தார்வாரில் 88 பேர், கதக்கில் 11 பேர், ஹாசனில் 90 பேர், ஹாவேரியில் 12 பேர், கலபுரகியில் 205 பேர், குடகில் 10 பேர், கோலாரில் 29 பேர், கொப்பலில் 24 பேர், மண்டியாவில் 58 பேர், மைசூருவில் 243 பேர், ராய்ச்சூரில் 28 பேர், ராமநகரில் 28 பேர், சிவமொக்காவில் 34 பேர், துமகூருவில் 204 பேர், உடுப்பியில் 89 பேர், உத்தரகன்னடாவில் 35 பேர், விஜயாப்புராவில் 50 பேர், யாதகிரியில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 25 பேர், மைசூரு, கலபுரகியில் தலா 2 பேர், பல்லாரி, பீதர், தட்சிண கன்னடா, ஹாசன், துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 35 ஆயிரத்து 789 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story