காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி


காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
x
தினத்தந்தி 8 April 2021 3:17 PM GMT (Updated: 8 April 2021 3:17 PM GMT)

காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஜன் மோஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளது.

Next Story