கர்நாடகத்தில் புதிதாக 6,570 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 6,570 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 April 2021 9:10 PM GMT (Updated: 8 April 2021 9:10 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 6,570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மருத்துவமனைகளில் சிகிச்சை

  கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 8 ஆயிரத்து 757 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 6,570 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 40 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.

  ஒரே நாளில் 2,393 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 73 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. 357 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 395 ஆக உயர்ந்துள்ளது.

மைசூருவில் 216 பேர்

  பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,422 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 21 பேர், பல்லாரியில் 126 பேர், பெலகாவியில் 92 பேர், பெங்களூரு புறநகரில் 54 பேர், பீதரில் 129 பேர், சாம்ராஜ்நகரில் 56 பேர், சிக்பள்ளாப்பூரில் 23 பேர், சிக்கமகளூருவில் 40 பேர், சித்ரதுர்காவில் 24 பேர், தட்சிண கன்னடாவில் 145 பேர், தாவணகெரேயில் 28 பேர், தார்வாரில் 96 பேர், கதக்கில் 14 பேர், ஹாசனில் 94 பேர், ஹாவேரியில் 15 பேர், கலபுரகியில் 240 பேர், குடகில் 19 பேர், கோலாரில் 66 பேர், கொப்பலில் 27 பேர், மண்டியாவில் 29 பேர், மைசூருவில் 216 பேர், ராய்ச்சூரில் 40 பேர், ராமநகரில் 10 பேர், சிவமொக்காவில் 70 பேர், துமகூருவில் 183 பேர், உடுப்பியில் 63 பேர், உத்தரகன்னடாவில் 142 பேர், விஜயாப்புராவில் 60 பேர், யாதகிரியில் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 22 பேர், கலபுரகியில் 3 பேர், பெங்களூரு புறநகர், மண்டியாவில் தலா 2 பேர், பெலகாவி, பீதர், தார்வார், கோலார், மைசூரு, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் என மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர்.

Next Story