கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியையும் கொரோனாவின் 2-வது அலை உலுக்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்று அதிகரிப்பால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story