கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று பதிவாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,955 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “
கர்நாடகாவில் இன்று 7,955- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,48,085-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,220 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 9,77,169-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று புதிதாக 46 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,813-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 58,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story