ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 10 April 2021 1:55 PM GMT (Updated: 10 April 2021 1:55 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

நாக்பூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வரும் நிலையிலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது.  

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

70 வயதான மோகன்பகவத் கடந்த மாதம் 7-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல்டோஸ் போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story