கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு


கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 5:08 PM GMT (Updated: 10 April 2021 5:08 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு அறிவித்துள்ளது.  அதன் விவரங்களை கீழ் காணலாம்.
  • திருமண விழாக்களில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 
  • உணவு விடுதிகள், பார்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். 
  • சினிமா திரையரங்குகளும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  
  • மராட்டியத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம். 
  • கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வருகை தந்தால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தவடுவர்.
  • பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை மைதானங்களில் நடத்திக்கொள்ளலாம்.
  • வரும் 30 ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,897- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏற்கனவே டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story