அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு


அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு
x
தினத்தந்தி 11 April 2021 11:44 AM GMT (Updated: 11 April 2021 11:44 AM GMT)

அசாம் மாநிலத்தில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஓரிரு இடங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக ரதாபாரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதால் மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. 

இதைப்போல ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தமே 90 வாக்காளர்கள் இருந்த நிலையில், அங்கு இரு மடங்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடி மற்றும் ஹப்லாங் தொகுதி உள்பட அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் 20-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

Next Story