சத்தீஷ்காரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான எந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு


சத்தீஷ்காரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான எந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு
x
தினத்தந்தி 12 April 2021 12:45 AM GMT (Updated: 12 April 2021 12:45 AM GMT)

சத்தீஷ்காரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான எந்திரங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர்.

ராய்ப்பூர், 

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் நகருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும்வகையில், மிங்காச்சல் நதிக்கரையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கட்டுமானப் பணி பகுதிக்கு 12 ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் நேற்று பிற்பகல் வந்தனர்.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வாகன ஓட்டுனர்கள், எந்திர இயக்குனர்களை மிரட்டி வேலையை நிறுத்தச் செய்தனர்.

பின்னர், 2 கான்கிரீட் கலவை எந்திரங்கள், 2 மண் அள்ளும் எந்திரங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றுக்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தீ வைப்பில் ஈடுபட்ட நக்சலைட்டுகளை தேடி வருகின்றனர்.

Next Story