காஷ்மீர்: பள்ளத்தாக்கில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி


காஷ்மீர்: பள்ளத்தாக்கில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
x
தினத்தந்தி 12 April 2021 1:14 PM GMT (Updated: 12 April 2021 1:14 PM GMT)

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் டோடா மாவட்டம் கஹாராவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு மினிபஸ் இன்று டோடா நோக்கி சென்றுகொண்டிருந்தது.

பியஹூல் கிராமத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story