திருப்பதி கோவில்களில் இன்று யுகாதி பண்டிகை விழா
திருப்பதி கோவில்களில் இன்று யுகாதி பண்டிகை விழா கொண்டாடப்படுகிறது.
திருமலை,
ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) யுகாதி பண்டிகை விழா கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை விழா நடக்கிறது.
அதையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. சாமிகள் வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கின்றனர். திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை பெற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story