கேரளா: நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதி விபத்து-3 பேர் உயிரிழப்பு?


கோப்பு படம்( பிடிஐ)
x
கோப்பு படம்( பிடிஐ)

கேரளாவில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பேபூர் என்ற இடத்தில் இருந்து ஒரு படகில் 14 மீனவர்கள் நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் மங்களூர் பகுதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக சென்ற கப்பல் திடீரென படகு மீது மோதியுள்ளது. 

இதில் மீனவர்கள் 3 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாயமான 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மங்களூரு கடலோர பாதுகாப்பு போலீசாரும், இந்திய கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீன் படகில் இருந்த 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Next Story