கர்நாடகத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இன்று கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,83,647 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,008 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 6,079 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் கர்நாடகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,92,003 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 13,008 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story