கேரளாவில் இன்று 7,515- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் இன்று 7,515- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 April 2021 2:15 PM GMT (Updated: 13 April 2021 2:15 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,515- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் இன்று புதிதாக 7,515 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை கூறியிருப்பதாவது:- கேரளாவில் இன்று  புதிதாக 7,515 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 73,441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வந்த எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.23 சதவிகிதம். 

கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,814 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,959 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம், 11,23,133 பேர் குணமடைந்துள்ளனர். 52,132 பேர்  கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story