கொரோனா அச்சுறுத்தல்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்


கொரோனா அச்சுறுத்தல்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டார்
x
தினத்தந்தி 13 April 2021 2:42 PM GMT (Updated: 13 April 2021 2:42 PM GMT)

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது:-

 எனது  அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்தனர். எனவே, நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எனது அனைத்து பணிகளையும் மெய் நிகர் முறையில் தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story