மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது; 281 பேர் பலி
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 281 பேர் பலியானார்கள்.
60 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் தொற்று பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஓரளவு பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 60 ஆயிரத்து 212 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 19 ஆயிரத்து 208 ஆக உயர்ந்து உள்ளது.
281 பேர் பலிஇதில் 28 லட்சத்து 66 ஆயிரத்து 97 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 5 லட்சத்து 93 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல மேலும் 281 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 526 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 81.44 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.66 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story