சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி


சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 14 April 2021 5:52 AM GMT (Updated: 14 April 2021 5:52 AM GMT)

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 
இது குறித்து அவர் தனது டுவிட்டரில்   பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதியாகி உள்ளது என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். நான் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பு கொண்டவர்களிடம் தங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அனைவரையும் சில நாட்கள் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

அகிலேஷ் யாதவ், சில நாட்களுக்கு முன்பு, அகில பாரதிய அகாதா பரிஷத் தலைவர் மகாந்த் நரேந்திர கிரியை சந்தித்தார், அவர் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது குறிப்பிட தக்கது.

Next Story